கணபதி படிப்பகம் – வல்வை

அறுபதின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டுக் கரையோர கிராமமான விழுந்த மாவ
நெடியகாட்டு பகுதியைச்சேர்ந்த இளம் நாடகக் கலைஞர் ஒரு நாடகத்தை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை படிப்பகத்தின் கட்டட நிதிக்கு கொடுப்பதெனவும் முடிவு எடுத்தார்கள். அத்தோடு தங்களுடைய முடிவை அன்றைய நிர்வாகத்தினரிடமும் தெரியப்படுத்தினார்கள். நிர்வாகத்தினரும் அவர்களுக்கு நல்லாதரவு வழங்கினர். அப்போது உதயமானதுதான் கலைவாணி நாடகமன்றம். அவர்களால் ”தீர்ப்புக்கு முன்” என்னும் சமுகசீர்திருத்த நாடகத்தை வல்வை நெடியகாடு தெற்கு வீதியில் நடாத்தி முடித்து செலவுபோக மிகுதிப்பணத்தை அன்றைய கொத்தியால் யூனியன் தலைவரும் வேம்படி வாசிகசாலையின் தலைவருமான திரு.தெ.இலெட்சுமிகாந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. பணம்கிடைத்த சில தினங்களில் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. அன்றைய காலத்தில் கடல் வணிகம் சிறப்புற நடைபெற்று வந்ததால் கொத்தியால் யூனியன் தொழிலாளர்கள் தாராளமாக பணத்தினை கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.
இப்படி கட்டடத்தை ஆரம்பத்திலிருந்து முன்னாள் நகரபிதா திரு.து.நவரெத்தினத்தின் சகோதரரரான திரு.து.சின்னராசா மேத்திரியாரும் அவருடன் வேலைபார்த்த அனைவரும் எந்தவித கூலியும் பெறாமல் சிரமதான மூலம் கட்டி முடித்தது குறிப்பிடத்தக்கது. திரு.ஐ.காத்தாமுத்து அவர்கள் படிப்பகத்தின் சன்னல் கதவுகளுக்குரிய மரங்களை கொடுத்துதவினார். வல்வை கெலியன்ஸ் நண்பர்கள் மின்குமிழ்களை அன்பளிப்புச் செய்தார்கள். அத்தோடு அப்பகுதி இளைஞர்கள் அனைவரும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
வல்வை நெடியகாட்டுப்பிள்ளையார் கோவிலின் அருகாமையில் அமைந்துள்ளதால் அனைவரின் ஒருமித்த கருத்துடன் கணபதி படிப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. தீர்ப்புக்குமுன் நாடகம் ஆறாம் மாதம் 1967ல் நடந்தது. மூன்று மாதத்தில் கட்டடம் முற்றுப்பெற்றது. ஊர்ப் பெரியவர்கள் ஒன்று கூடி நல்ல நேரத்தில் 14.09.1967ல் அன்றைய படடினசபைத்தலைவர் திரு.சி.இரத்தினவடிவேல் அவர்கள் திறந்து வைத்தார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக