செம்மண் பரப்புகளில்
உண்டு வளர்ந்து
ரசாயணம் துறந்து
கூர் நாசியில்
அவை தரும் மென்வாசம்
சொல்லில் அடங்காது
உண்டு வளர்ந்து
ரசாயணம் துறந்து
கூர் நாசியில்
அவை தரும் மென்வாசம்
சொல்லில் அடங்காது
நாணல்களில்
உயர்ந்து அடங்கி
நீர் ஓவியம் வரைகிற
வெண்பனிப் பொழுது
அவன்
பூ நுகரும் காலம்
உயர்ந்து அடங்கி
நீர் ஓவியம் வரைகிற
வெண்பனிப் பொழுது
அவன்
பூ நுகரும் காலம்
ஒவ்வொரு நுகர்வுக்கும்
ஒவ்வொரு வாசம் தர
பூக்களால் மட்டுமே முடியும்
ஒவ்வொரு வாசம் தர
பூக்களால் மட்டுமே முடியும்
பூக்களுக்கும்
அவனை ரொம்பப் பிடிக்கும்
விரல்களால் உயிர் பறித்து
அவன் நுகர்வதற்கு
முந்தைய கணம்வரை!
அவனை ரொம்பப் பிடிக்கும்
விரல்களால் உயிர் பறித்து
அவன் நுகர்வதற்கு
முந்தைய கணம்வரை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக